கச்சத்தீவை மீட்பேன் என்று கருணாநிதி எப்படி தீர்மானம் போட்டு மக்களை ஏமாற்றினாரோ அதே போன்று தான் இந்த நீட் எதிர்ப்பு தீர்மானமும் – பிரபல எழுத்தாளர் கடும் தாக்கு..!

கச்சத்தீவை மீட்பேன் என்று கருணாநிதி எப்படி தீர்மானம் போட்டு மக்களை ஏமாற்றினாரோ அதே போன்று தான் இந்த நீட் எதிர்ப்பு தீர்மானமும் – பிரபல எழுத்தாளர் கடும் தாக்கு..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். “நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்கிற ரகசியம் எங்களுக்கு நன்கு தெரியும், என்று தி.மு.கவின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கூறி வந்தார். கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று முந்தைய அ.தி.மு.க அரசு மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார் உதயநிதி. நீட் தேர்வை ரத்தே செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்த உதயநிதி உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் எழுத்தாளர், அரசியல் விமர்சகர், என பன்முகதன்மை கொண்ட மாரிதாஸ் அவர்கள் கச்சத்தீவை எப்படி மீட்பேன் என்று கலைஞர் தீர்மானம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றினாரோ அதே போன்று தற்பொழுது உள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலினும் மக்களை ஏமாற்றவே நீட் எதிர்ப்பு தீர்மானம் என்று அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it