கியூப மக்களுக்கு உடனடியாக சிரிஞ்சுகள் அனுப்பி வைக்க கம்யூனிஸ்ட் தோழர்கள் முன்வர வேண்டும் – மார்க்சிய அறிஞர் வேண்டுகோள்..!

கியூப மக்களுக்கு உடனடியாக சிரிஞ்சுகள் அனுப்பி வைக்க கம்யூனிஸ்ட் தோழர்கள் முன்வர வேண்டும் – மார்க்சிய அறிஞர் வேண்டுகோள்..!

Share it if you like it

சீன வைரஸ் உலகையே இன்று ரத்த கண்ணீர் வடிக்க வைத்துள்ளது, என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது, சீனாவை பார், கியூபாவை பார், இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் இது தான் கேரள மாடல், கேரளாவை பார்த்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அருணன், சுந்தரவள்ளி, கனகராஜ், போன்ற தோழர்கள் ரொம்ப ஓவராகவே பேசி வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் மார்க்சிய அறிஞரும், டிரை காண்டினைன்டல் சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குனருமான பேரா.விஜய் பிரசாத் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக அளவில் அறுபது சதவீத சிரிஞ்சுகள் இந்தியாவில் தான் உற்பத்தி ஆகின்றன. இந்துஸ்தான் சிரிஞ்சு நிறுவனம் அதை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இந்திய கம்யூனிஸ்ட்கள் கியூப மக்களுக்கு உடனடியாக தங்களால் முடிந்த அளவு சிரிஞ்சுகள் வாங்கி கியூப மக்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  படுதோல்வியடைந்த கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்கு எதிராக கியூப மக்கள் அண்மையில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person and text that says "வைகை பிரிண்டர்ஸ் பப்ளிசர்ஸ் 99440-47178 94458-48954 தீக்கதிர் THEEKKATHIR TAMIL, DAILY e இந்தியாவில் கொரோனா பலி 40 லட்சம் பேர்? கியூப மக்களுக்கு சிரிஞ்சுகள் அனுப்பி வைப்பீர்! இந்திய மக்களுக்கு மார்க்சிய அறிஞர் பேரா. விஜய் பிரசாத் வேண்டுகோள்"

Image


Share it if you like it