மதுரை கேசவ சேவா கேந்திரம் சார்பாக மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
மதுரை கேசவ சேவா கேந்திரம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். மருத்துவர் பிரிவு ஆகியவை இணைந்து, மதுரை சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய 50 மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதத்தில், ஆக்சிஜன் செறிவு (ம) ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கேசவ சேவா கேந்திர தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். சேவா பாரதி மாவட்டச் செயலாளர் சிவபாலன், ப்ராந்த்த சம்பர்க ப்ரமுக் ஶ்ரீனிவாசன், மதுரை ஆர்.எஸ்.எஸ். மருத்துவர் பிரிவு பொறுப்பாளர் விஸ்வநாதன், மதுரை ஆர்.எஸ்.எஸ். மருத்துவர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மதுரை சார்ந்த மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.