மிக்ஜாம் வெள்ளம் வந்து 5 நாட்கள் ஆன பின்பும் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும், இதுவரை அந்த நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் திமுக அரசை காரசாரமாக திட்டி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் பால் பாக்கெட்டுகள் கூட இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள கால்வாயில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.