அமைச்சர் கார் மோதி புது மாப்பிள்ளை பலி… மனைவி படுகாயம்!

அமைச்சர் கார் மோதி புது மாப்பிள்ளை பலி… மனைவி படுகாயம்!

Share it if you like it

அமைச்சர் கார் மோதி புது மாப்பிள்ளை பலியான சோகம் அரங்கேறி இருக்கிறது. அவரது மனைவியும் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்சன். இவர், இன்று காலை தனது மனைவி ரூத்பொன் செல்வியை அழைத்துக் கொண்டு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள மாமியார் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். அதேசமயம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்குச் சென்றிருந்தார். ஆகவே, அவரை அழைத்து வருவதற்காக, அவரது கார் டிரைவர் காரை எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றார்..

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே சென்றபோது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது அமைச்சரின் கார் மோதியது. இதில், பைக்கில் இருந்த புதுமண தம்பதியினர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் கணவர் ஜான்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி ரூத்பொன் செல்வி பலத்த காயமடைந்தார். இவர், உடனடியாக மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இருவருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it