மாநிலம் முழுவதும் சுமார் 500 கலைஞர் உணவகம் அமைக்க உள்ளதாகவும் அதற்கான 100 சதவிகித நிதி அதாவது மொத்த நிதியையும் மத்திய பாஜக அரசே கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார் அமைச்சர் சங்கரபாணி இத்தகவல் நேற்று செய்திகளில் வெளியானது.
ஏற்கனவே மத்திய அரசின் பல திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாக சமூகவலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டிவரும் நிலையில், கலைஞரின் பெயரில் உருவாக்கப்படும் உணவகங்களுக்கு மத்திய அரசு நிதி தரவேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.