பிரதமருக்கு மம்தா பானர்ஜி உருக்கமான கோரிக்கை!

பிரதமருக்கு மம்தா பானர்ஜி உருக்கமான கோரிக்கை!

Share it if you like it

தனது தாயை இழந்து தவித்து வரும் பாரதப் பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்க முதல்வராக இருப்பவர் மம்தா பேனர்ஜி. இவர், பா.ஜ.க. மற்றும் பாரதப் பிரதமர் மோடியை மிக கடுமையாக சாடுவதை வழக்கமாக கொண்டவர். அரசியலில் எலியும், பூனையுமாக இருக்கும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில், தனது தாயை இழந்து தவித்து வரும் பாரதப் பிரதமர் மோடிக்கு மம்தா பேனர்ஜி வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை இதோ

தயவு செய்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்!

இறந்தவர் உங்கள் தாய் மட்டும் அல்ல, அவர் எங்களுக்கும் தாய் தான். தங்கள் செயல்பாடுகள் தொடர பலம் அளிக்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களது, தாயின் இறப்பிற்கு என்னால் எப்படி? தேற்றுவது என்றே தெரியவில்லை. உங்கள் தாய் இறந்த பிறகும் நீங்கள் காணொளி வாயிலாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. தயவு செய்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் பிரதமர் மோடிக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.


Share it if you like it