தேர்தல் படுதோல்வி: பிரதமரை தனிப்பட்ட முறையில்  தாக்கி பேசிய காங்கிரஸ் நிர்வாகி!

தேர்தல் படுதோல்வி: பிரதமரை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசிய காங்கிரஸ் நிர்வாகி!

Share it if you like it

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியுள்ளது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலூச்சாமி பாரதப் பிரதமர் மோடியை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய காணொளி தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றபின்பு பல மாநில தேர்தல்களில் அக்கட்சி அமோக வெற்றி பெற்று வருகிறது. அதே வேளையில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தொடர்ந்து சந்தித்து வருகிறது. ராகுல் காந்தி தலைவராக பொறுப்பு ஏற்ற பின்பே, காங்கிரஸ் தோல்விகளை சந்தித்து வருகிறது. என வெளிப்படையாகவே அக்கட்சியின், மூத்த தலைவர்கள் பலர் தற்பொழுது முனுமுனுத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், உபி. பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகியது. இதில், 5.க்கு 4. இடங்களில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. போட்டியிட்ட 5 இடங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது காங்கிரஸ். எளிதாக வெற்றி பெற வேண்டிய மாநிலத்தை காங்கிரஸ் கோட்டை விட்டுவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தவிர, குடும்ப ஆதிக்கம் மற்றும் மக்கள் முகம் சுளிக்கும் வகையில், ஆபாசமாக பேசி வரும் காங்கிரஸ் தலைவர்களே இதற்கு முக்கிய காரணம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. அந்த வகையில், பிரபல ஊடகமான தந்தி டிவி 5 மாநில தேர்தல் களநிலவரம் குறித்து விவாதம் ஒன்றினை நடத்தியுள்ளது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி. 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், தான் என்ன பேச வேண்டும் என்பதை மறந்து விட்டு, பாரதப் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியுள்ளார். தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப, திருச்சி வேலுச்சாமியின் அருவருக்கதக்க பேச்சின் மூலம் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளுக்கு யார்? காரணம் என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it