பிரதமரை ‘கொலைகாரர்’ என்று பேசிய வன்னியரசிற்கு கள்ள மெளனம்..! முட்டு கொடுக்காதீர்கள் என்று பேசிய ஜே.வி.சி ஸ்ரீராம் மீது பொங்கிய நெறியாளர்..!

பிரதமரை ‘கொலைகாரர்’ என்று பேசிய வன்னியரசிற்கு கள்ள மெளனம்..! முட்டு கொடுக்காதீர்கள் என்று பேசிய ஜே.வி.சி ஸ்ரீராம் மீது பொங்கிய நெறியாளர்..!

Share it if you like it

பிரபல அரசியல் விமர்சகர் ஜே.வி.சி ஸ்ரீராம் மீது நியூஸ் 18 நெறியாளர் தம்பி தமிழரசன் சீற்றம்.

பிரபல ஊடகமான நியூஸ் 18 அண்மையில் ஊடக விவாதம் ஒன்றினை நடத்தியது. இதில் பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம், வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான வன்னியரசு, தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் சரவணன் மற்றும் நித்யானந்தம் கலந்து கொண்டனர்.

ஹிந்து மதத்திற்கு எதிராகவும், பா.ஜ.க-விற்கு எதிராகவும், மட்டுமே இன்று வரை பேசி வரும் வன்னியரசு அவர்கள் லட்சகணக்கான மக்கள் பார்த்து கொண்டு இருக்கும் ஊடக விவாதத்தில் பாரதப் பிரதர் மோடியை கொலைக்கார் என்று பேசியது பா.ஜ.கவினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த்து. வன்னியரசை கண்டிக்க வேண்டிய நெறியாளர் மழுப்பலாக நடந்து கொண்டதற்கு பலரும் தங்களின் கோவத்தை அப்பொழுது வெளிப்படுத்தி இருந்தனர்.

அதனை தொடர்ந்து மத்திய அரசு குறித்த ஊடக விவாதம் ஒன்றினை நியூஸ் 18 நடத்தியது. இதில் ஜே.வி.சி ஸ்ரீராம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி, மற்றும் பத்திரிக்கையாளர் ஆர். ராதா கிருஷ்ணனம் கலந்து கொண்டனர். தி.மு.க-வின் தீவிர ஆதராவளர் என்று அழைக்கப்படும் ஆர்.கே-விற்கு எதிராக முட்டு கொடுக்கும் வகையில் பேசாதீர் என்று ஸ்ரீராம் பேசியதற்கு நெறியாளர் தம்பி தமிழரசன் பொங்கியதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it