தமிழகத்தில் பிரதமர் போட்டி: பா.ஜ.க. பொதுச்செயலாளர் கருத்து!

தமிழகத்தில் பிரதமர் போட்டி: பா.ஜ.க. பொதுச்செயலாளர் கருத்து!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில், பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன் பாலகணபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, கருப்பு முருகானந்தம் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் :

கட்சி நிர்வாகிகள் ஒழுக்கத்துடன் இருந்தால் தான் கட்சியில் நீடிக்க முடியும். லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத்தான் ராமநாதபுரத்தில் நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். பிரதமர் மோடி போட்டியிடுவதாக எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ராமநாதபுரமும் ஒன்று. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை ‘டிபாசிட்’ இழக்க செய்ய வேண்டும்.

பிரதமர் மோடியை ஜெயிக்க வைத்து பிரதமராக அமர வைப்பது ஒன்றே நம் நோக்கமாக இருக்க வேண்டும். அவரால், இந்தியாவின் முதன்மை மாவட்டமாக ராமநாதபுரம் மாற்றப்படும் என கூறினார்.


Share it if you like it