பிரதமருக்கு கொலை மிரட்டல்; விசாரணையில் திடுக் தகவல்!

பிரதமருக்கு கொலை மிரட்டல்; விசாரணையில் திடுக் தகவல்!

Share it if you like it

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ( 24. 4. 2023 ) கேரள மாநிலத்திற்கு வருகை தர இருக்கிறார். வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் மற்றும் பல்வேறு  நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.  இந்த நிலையில், பிரதமர் மோடி கேரளா வந்தால் படுகொலை செய்யப்படுவார் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்திருக்கிறது. இதையடுத்து, அவர் கேரள டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தார்.

அந்த வகையில், கேரள காவல்துறையினர் சேவியர் என்பவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக, தனது உறவினரை சிக்க வைக்க வேண்டி பிரதமருக்கு கொலை மிரட்டல் கடிதம் எழுதியாக ஒப்பு கொண்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it