பொம்மன் – பெள்ளியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

பொம்மன் – பெள்ளியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

Share it if you like it

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பாரதப் பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். அந்தவகையில், யானை பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்களுடன் உரையாடிச் சென்றார். இந்த நிலையில், அவர்களுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், `பொம்மி-ரகுவுடன் பொம்மனையும், பெள்ளியையும் சந்தித்ததில் என்ன ஒரு மகிழ்ச்சி” எனப் பதிவிட்டிருக்கிறார்.


Share it if you like it