கோடி கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது என மத்திய அரசை பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இவ்வாறு கூறினார் ; இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது உலகில் மிகப்பெரிய சாதனை. ஆனால், நோய் தொற்றுக்கள் குறித்து முன்கூட்டிய எச்சரிக்கும் கருவிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.