ரூ. 10 ஆயிரம் கோடி: பி.பி.சி. மீது அவதூறு வழக்கு!

ரூ. 10 ஆயிரம் கோடி: பி.பி.சி. மீது அவதூறு வழக்கு!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடிக்கு களங்கம் கற்பிக்க முயன்ற பி.பி.சி. மீது குஜராத் மாநிலத்தை சேர்ந்த சமூக அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டு, பலர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் நாசமடைந்தன. இந்த சம்பவத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில், குஜராத் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்கலவரம் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதில், குஜராத் கலவரத்தில் அப்போது அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த மோடிக்கு தொடர்பு இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இதுதான் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய பிரதமர் மீது ஐரோப்பிய நாடு எப்படி குற்றம் சுமத்தலாம் என்று அரசியல் பிரமுகர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மேற்கண்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும், தடையை மீறி பல இடங்களில் திரையிடப்பட்டு வந்தது. இதனிடையே, இங்கிலாந்து நாட்டு எம்.பி. ஒருவரே, அந்த ஆவணப்படம் பி.பி.சி. நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை என்றும், தனியார் அமைப்பு மூலம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததோடு, தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார். அதேபோல, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பி.பி.சி. ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று குஜராத் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பிரதமர் மோடியைப் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்த பி.பி.சி.க்கு ரூ. 10 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து, உரிய பதில் அளிக்குமாறு பி.பி.சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Share it if you like it