எங்களுக்கு உயிர் தந்த மோடி ஐயாவிற்கு நன்றி… இலங்கை தமிழர்கள் உருக்கம்… தம்பிகளுக்கு சமர்ப்பணம்!

எங்களுக்கு உயிர் தந்த மோடி ஐயாவிற்கு நன்றி… இலங்கை தமிழர்கள் உருக்கம்… தம்பிகளுக்கு சமர்ப்பணம்!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் நன்றி தெரிவித்து பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இலங்கை வாழ் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், மலையக தமிழர்களுக்கு 161 வீடுகளை பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கட்டி கொடுத்துள்ளது. மலையக தமிழர்களின் வீடுகள் எப்படி உள்ளது என்பதை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் ஆர்.ஜே சந்துரு. இவர், இலங்கையின் மிக பிரபலமான யூ டியூப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர்களுக்கு பாரதப் பிரதமர் மோடி என்ன செய்தார் என்பதற்கு சந்துருவின் காணொளியே சிறந்த உதாரணம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், பாரதப் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் நன்றி தெரிவித்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாரதப் பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அவதூறு பேசி வரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது.


Share it if you like it