சனாதன ஒழிப்பு பேச்சு இந்திய கலாச்சாரத்தின் மீதான தாக்குல் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். யார் எவ்வளவு தாக்கு தல் நடத்தினாலும் சனாதனம் உயரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சனாதன தர்மத்தை ஒழிக்க ‘இந்தியா’ கூட்டணியினர் முயற்சிப்பதால் அவர்களிடம் சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளவர் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.