மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மகனும் பிரபல திரைப்பட நடிகருமாக இருந்த புனித் ராஜ்குமார் அவர்கள் இன்று மாரடைப்பு காரணமாக அகால மரணம் அடைந்தது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு தனது இரங்கலை இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.
விதியின் கொடுமையான ஆட்டமும், திறமையான நடிகருமான புனித் ராஜ் குமார் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டார். இது இறக்கும் வயது இல்லை. அவரது அற்புதமான ஆளுமை மற்றும் பணிக்காக அவர் வருங்கால சந்ததியினரால் அன்புடன் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி..