பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கர்நாடகாவின் யாத்கிரியில் வசிக்கும் முகமது ரசூல் கதாரே மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியைக் கொன்றுவிடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டும் காணொளி ஒன்றை முகமது ரசூல் கதாரே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியானது இணையத்தையே உலுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் முகமது ரசூல் மீது யாத்கிரியில் உள்ள சூர்பூர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 505(1)(b) மற்றும் 25(1)(b) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.