வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொண்ட PC – அண்ணாமலை ரிவீட்டு..!

வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொண்ட PC – அண்ணாமலை ரிவீட்டு..!

Share it if you like it

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு நகரங்களில் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

‘கட்சி எழும்புகிறதோ இல்லையோ; கட்டடங்கள் எழும்புகின்றன. நான்கு நகரங்களில், மாவட்ட கட்சியின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலக கட்டடங்களை, ஒரே நாளில் திறக்கும் கட்சிக்கு பாராட்டுகள்’ என, வஞ்ச புகழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

“ஐயா, ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி. அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம். தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. என டுவிட்டரில் பதிலடி தந்துள்ளார்.


Share it if you like it