நிர்வாண படம் எடுத்து தொழிலதிபர் மகளுக்கு மிரட்டல்: பணம், நகைகளை பறித்து உல்லாசம்; அமானுக்கு வலை!

நிர்வாண படம் எடுத்து தொழிலதிபர் மகளுக்கு மிரட்டல்: பணம், நகைகளை பறித்து உல்லாசம்; அமானுக்கு வலை!

Share it if you like it

மும்பையில் தொழிலதிபர் மகளை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த அமானை போலீஸார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அவர். இவரது 12 வயது மகள் அங்குள்ள பிரபலமான தனியார் ஆங்கில வழி பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, வெளியே நின்றிருந்த அமான் என்கிற நபரை பார்த்திருக்கிறார். அப்போது அமான், அச்சிறுமியிடம் நட்பாக பேசி இருக்கிறான். பின்னர், அடிக்கடி பள்ளி முன்பு வந்து நிற்பதும், அச்சிறுமியிடம் பேசி பழகுவதுமாக இருந்திருக்கிறான். இப்படி இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், ஒரு நாள் அச்சிறுமியை நாக்பாடாவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறான் அமான்.

பின்னர், அங்கு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து சிறுமியை அழைத்துச் சென்றிருக்கிறான். அந்த அறையில் வைத்து சிறுமியை நிர்வாணமாக போட்டோக்கள் எடுத்திருக்கிறான். பின்னர், அப்படங்களை காட்டி, பணம் கேட்டு மிரட்டத் தொடங்கி இருக்கிறான். அவனது மிரட்டலுக்கு பயந்து அச்சிறுமி தனது வீட்டில் இருந்து திருடி முதலில் 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். சிறிது நாளில் மீண்டும் மிரட்டவே, பின்னர் 2 லட்சம் ரூபாயை திருடி அமானிடம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அமானின் மிரட்டல் நிற்கவில்லை. எனவே, வீட்டில் இருந்த வைர மோதிரம், நெக்லஸ், வைர வளையல்கள், தங்கச் செயின், தங்க லாக்கெட் உள்ளிட்ட நகைகளை திருடி அமானிடம் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், தங்களுடைய வீட்டிலிருந்து நகைகள் மற்றும் பணம் காணாமல் போவதை உணர்ந்த பெற்றோர், ஏதோ தவறு நடக்கிறது என்பது புரிந்துகொண்டனர். இதையடுத்து, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார், அச்சிறுமியின் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உட்பட உறவினர்கள் வரை அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால், எந்த பிரயோஜனமும் இல்லை. அப்போதுதான். அச்சிறுமியின் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அச்சிறுமியை தனியாக அழைத்து விசாரித்தனர். அப்போதுதான், தனது நிர்வாணப் படங்களை வைத்து அமான் மிரட்டுவதாகவும், பணம் தராவிட்டால் படங்களை இணையத்தில் பகிர்ந்து விடுவதாக மிரட்டுவதாகவும் அச்சிறுமி கூறியிருக்கிறார்.

இதையடுத்து, தொழிலதிபர் மகளை படம் எடுத்து மிரட்டி  பணம் பறித்த அமான் மீது இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் வன்கொடுமைச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போஸ்கோ சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களில் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Share it if you like it