இளையராஜா மட்டமானவரா, நீ கேடுகெட்டவனா..? ஜேம்ஸ் வசந்தனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

இளையராஜா மட்டமானவரா, நீ கேடுகெட்டவனா..? ஜேம்ஸ் வசந்தனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

Share it if you like it

இளையராஜாவை மட்டமானவர் என்று விமர்சனம் செய்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மேலும், ஜேம்ஸ் வசந்தனை நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஒரு காலக்கடத்தில் இசையமைப்பாளராகவும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்தவர் ஜேம்ஸ் வசந்தன். தற்போது, இசையமைப்பாளர் வாய்ப்புகளும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்புகளும் இல்லாததால் சமூக வலைத்தளமே கதி என்று கிடக்கிறார். யாராவது வி.வி.ஐ.பி.க்கள் ஏதாவது கருத்துச் சொன்னால், தான் ஏதோ பெரிய அறிவாளி என்பதுபோல முந்திரிக்கொட்டையாக முந்திக் கொண்டு மூக்கை நுழைத்து கருத்துத் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால், பல சந்தர்ப்பங்களில் மூக்குடை பட்டதும் உண்டு. மேலும், பாலியல் புகாரில் சிறைக்குச் சென்று வந்தவர். அடுத்தவர் மனைவி அபகரித்துக் கொண்டு குடும்பம் நடத்தியதால், சொந்த மனைவியாலேயே போலீஸில் புகார் செய்யப்பட்டவர். எனினும், தான் யோக்கியன் எந்பதுபோல சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான், இசைஞானி என்று எல்லோரும் புகழப்பட்டு வரும் இளையராஜாவை மட்டமானவர் என்று விமர்சித்து, நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஜேம்ஸ் வசந்தன், “இளையராஜா மாதிரி மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது. அவர் பெரிய இசையமைப்பாளர், அவருக்கு இசைஞானினு பட்டம் கொடுத்திருக்காங்க. அதுக்கெல்லாம் அவர் முழு தகுதியானவர்தான். ஆனால், ஒரு மனிதனாக அவர் ரொம்ப மட்டமானவர். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, இயேசு கிறிஸ்து வாழ்ந்தாரா, வந்தாரா, உயிர்த்தெழுந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ரமண மகரிஷி ஒருவர்தான் செத்து உயிர்த்தெழுந்தவர் என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா. இது அவருக்கு தேவையா?

கொஞ்சமாது ஆன்மீக புரிதல் உள்ளவனாக இருந்திருந்தால், இப்படி பேசி இருப்பாரா? இயேசு கிறிஸ்துவை கோடிக்கணக்கான மக்கள் நம்புறாங்க. அப்படி இருக்கையில், அத்தனை பேரையும் காயப்படுத்தும் விதமாக இப்படி பேசலாமா? இவர் ஒன்றும் வரலாற்று ஆசிரியர் கிடையாது. ஒரு கூற்றை சொல்ல வருபவர், அதை மட்டும் சொல்லிவிட்டு செல்ல வேண்டியதுதானே? அத்தனை பேரையும் கேலப்படுத்துகிற, ஒரு கேவலமான ஈனபுத்தி இருக்குல்ல, அதுனாலதான் அவரை மட்டமான மனிதர்னு நான் சொல்றேன்” என்று கூறியிருக்கிறார். அதாவது, இயேசுவை குற்றம்சொல்லி விட்டாராம் இளையராஜா. இதை ஒரு கிறிஸ்தவர் என்கிற முறையில் ஜேம்ஸ் வசந்தனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே, இளையராஜா மீது தனது வன்மத்தை கொட்டி இருக்கிறார்.

இவர் பேசிய இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், ஜேம்ஸ் வசந்தனுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். நெட்டிசன்களோ தங்களால் முடிந்த அளவுக்கு கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர். இளையராஜவின் செருப்புக்கு சமமாகக் கூட நீ வரமாட்ட. நீயெல்லாம் பேசுறியா என்றும், இசையமைப்பாளர் வாய்ப்பும் இல்லாம, நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்பும் இல்லாம வெட்டியா பொழுதை போக்கிக்கிட்டு இருக்கிற நீயெல்லாம் இசைஞானியைப் பற்றி பேசலாமா என்றும், இளையராஜா மட்டமானவா அல்லது பாலியல் புகாரில் சிக்கி ஜெயிலுக்கு போயிட்டு வந்த நீ கேடுகெட்டவனா என்றும், இன்னும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளாலும் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர். இதை எல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் உனக்குத் தேவையா ஜேம்ஸ் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது… ஜேம்ஸ் வசந்தன் இசைஞானியைப் பற்றி இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்….


Share it if you like it