மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் முறையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் முறையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ..!

Share it if you like it

திருநெல்வேலி சட்டமன்ற பா.ஜ.க எம்.எல்.ஏ அரசு அதிகாரிகளிடம் முறையீடு.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, என பல தொண்டு நிறுவனங்கள், உட்பட பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து பா.ஜ.க-வை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வரும் நிலையில், திருநெல்வேலி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் துணை தலைவருமான நைனார் நாகேந்திரன் அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து உள்ளார்.


Share it if you like it