கடமை கண்ணியம் கட்டுப்பாடு – நாஞ்சில் சம்பத்!

கடமை கண்ணியம் கட்டுப்பாடு – நாஞ்சில் சம்பத்!

Share it if you like it

தி.மு.க.வின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், சத்தியம் டி.வி நெறியாளரை மயிறு என்று, தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து உள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. ஊடகவியலாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது பற்றி இதுவரை பத்திரிக்கையாளர் சங்கம் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும் சமீபத்தில் முதல்வரிடம், இருந்து அண்ணா விருது பெற்றவர் நாஞ்சில் சம்பத். இவர், சத்தியம் டிவி.யின் நெறியாளர் முக்தர் அஹமத்வை மயிறு என்று திட்டியுள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. அதே போல, ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் மும்பை ரெட் லைட் என்று, தி.மு.க.வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி சமீபத்தில் பேசிய காணொளிகளை இன்றும் காண முடியும். இப்படியாக, தொடர்ந்து பத்திரிக்கையாளர்களும், நெறியாளர்களும் தி.மு.க.வினரால் தொடர்ந்து இழிவுப்படுத்தப்படும் சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது. தி.மு.க.விற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நெறியாளர் செந்தில், இது குறித்து எப்பொழுது வாய் திறப்பார் என பலர், கேள்வி எழுப்பி வருகின்றனர். கடமை கட்சி மாறுவது, கண்ணியம் கிடையவே கிடையாது, கட்டுப்பாடு எப்பொழுதுமே இல்லை இது தான் நாஞ்சில் சம்பத் கொள்கை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it