ஆளுநரை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்!

ஆளுநரை ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்!

Share it if you like it

தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை ஒருமையில் பேசியுள்ளார். இதுகுறித்து, தனக்கு ஏற்பட்ட வலியை வேதனையுடன் தெரிவித்துள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது.

தி.மு.க.வின் தீவிர ஆதரவாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். இவர், தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர். அரசியல் கட்சிகளுக்கு மைக் செட் வாடகைக்கு விடுவது போல், தனது வாயையும் பல கட்சிகளுக்கு வாடகை விட்டு அதன்மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார் இவர் என்பது பலரின் குற்றச்சாட்டு.

பா.ஜ.க, பாரதப் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என அனைவரையும் மிக கடுமையாக இன்று வரை விமர்சனம் செய்து வருகிறார். இப்படியாக, தி.மு.க.விற்கு ஆதரவாகவும் மாற்று கட்சியை சேர்ந்தவர்களை தொடர்ந்து இழிவுப்படுத்தியுள்ளார். சமீபத்தில் சத்தியம் டிவி.யில் நடைபெற்ற நேர்காணலில், நெறியாளர் முக்தர் அஹமத்வை மயிறு என்று திட்டிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளத்தில் காண முடியும்.

அந்த வகையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் – மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசும்போது நாஞ்சில் சம்பத்தால் தனக்கு ஏற்பட்ட வலியை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று மார்தட்டி கொள்ளும் தி.மு.க ஆபாச பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை உடனே கைது செய்ய முன்வருமா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it