பா.ஜ.க மூத்த தலைவருக்கு வி.சி.க கட்சியின் நிர்வாகி மிரட்டல்.
பா.ஜ.க செய்தி தொடர்பாளரும் மூத்த தலைவருமான நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.
- ‘காங்கிரஸ் இல்லாத பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்கலாம் என்று ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். தயவு செய்து அப்படிப்பட்ட முயற்ச்சிக்கு திமுக துணை போய்விடக்கூடாது. காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை கட்டினால் அது பாஜகவுக்கு சாதகமாக முடியும்’ – தொல் திருமாவளவன்.
- இந்த பேச்சிலிருந்து மூன்று விஷயங்கள் தெளிவாகிறது. 1. காங்கிரஸ் – திமுக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. 2. திரு. தொல் திருமாவளவனுக்கு பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சம் அதிகமாகியுள்ளது. 3. பாஜக வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் ‘தமிழர்களை’ கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டணியே முக்கியம், அதாவது தமிழினத்தை விட ‘அரசியல் அதிகாரம் மற்றும் ஆதிக்கமே’ முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார். தமிழா! தமிழா! இதுவல்லவோ தமிழின துரோகம்?
இதற்கு வி.சி.க கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் நாராயணன் திருப்பதி அவர்களுக்கு அளித்த பதில்.
சரக்கு, மிடுக்கு, என்று பேசி வரும் திருமாவளன் பாதையை பின்பற்றும் கட்சி நிர்வாகிள், தொண்டர்களிடம், வேறு என்ன மாதிரியான பதிலை எதிர்பார்க்க முடியும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேசிய சிந்தனை கொண்டவர்கள் கருத்து தெரிவித்தால் உடனே கைது செய்யும் காவல்துறை வி.சி.க நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.