கொரோனா சான்றிதலில் இருந்து பிரதமர் மோடியின் புகை படத்தை நீக்க கோரி கேரளாவை சேர்ந்த பீட்டர் மலையனபரம்பில் என்பவர் உயர்நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கேரளா நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறிகையில் கொரோனா சான்றிதலில் பிரதமர் புகைப்படம் இருப்பது மக்களின் நம்பிக்கை உருவாக்கும் விஷயம் என்றும் மேலும் பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதுபோன்ற அற்பதனமான வழக்குகளை தொடுப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும், வழக்கு தொடுத்த பீட்டர் மலையனபரம்பிலுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். 6 வாரங்களுக்கள் கேரள மாநில சட்ட சேவை ஆணையத்திடம் அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் கட்டத் தவறினால் அவரின் சொத்தை பறிமுதல் செய்யப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.