தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட திருத்தம் ஒன்றினை கொண்டு வந்தது தி.மு.க அரசு. அந்த மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்து இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது ஸ்டாலின் அரசு. இந்த நிலையில் தான், உங்கள் மசோதாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.