நெல்லையில் மத மாற்ற கும்பல் விரட்டியடிப்பு!

நெல்லையில் மத மாற்ற கும்பல் விரட்டியடிப்பு!

Share it if you like it

சென்னையிலிருந்து நெல்லைக்குச் சென்ற மத மாற்றத்தில் ஈடுபட்ட கும்பல் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னையிலிருந்து கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்த கும்பல் ஒன்று திருநெல்வேலி மாட்டத்திற்குச் சென்றிருக்கிறது. அங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மத மாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறது. அப்படி ஒரு கும்பல் பாளையங்கோட்டை சாந்திநகர் வ.உ.சி. தெருவிற்குச் சென்று மத மாற்றம் செய்திருக்கிறது. இதைக் கண்ட பா.ஜ.க. பாளையங்கோட்டை கிழக்கு மண்டல வர்த்தகப் பிரிவு தலைவர் கேட்டரிங் சங்கரசுப்ரமணியன் உள்ளிட்ட சிலர், மத மாற்ற கும்பலிடம் விசாரித்திருக்கிறார்கள்.

அப்போதுதான், அக்கும்பல் சென்னையிலிருந்து வந்திருக்கும் விவரம் தெரியவந்தது. இதையடுத்து அக்கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கரசுப்பிரமணியன், அக்கும்பலை அங்கிருந்து விரட்டி அடித்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it