‘மயிர புடுங்கிட்டு இருந்தேன்…’ சி.எஸ்.ஐ. திருமண்டல கூட்டத்தில் திமிராக பேசிய தி.மு.க. எம்.பி.யால் பரபரப்பு!

‘மயிர புடுங்கிட்டு இருந்தேன்…’ சி.எஸ்.ஐ. திருமண்டல கூட்டத்தில் திமிராக பேசிய தி.மு.க. எம்.பி.யால் பரபரப்பு!

Share it if you like it

நெல்லையில் நடந்த சி.எஸ்.ஐ. கூட்டத்தில், தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட நபரை, மயிர புடுங்கிட்டு இருந்தேன் என்று பேராயர் முன்னிலையிலேயே தி.மு.க. எம்.பி. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சி.எஸ்.ஐ. திருமண்டல கல்வி நிலவரக் கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்ணபாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருநெல்வேலி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்ட திருமண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காரசாரமான விவாதம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் எழுந்து, திருமண்டல நிர்வாகிகளைப் பார்த்து காச்மூச் என சவுண்டு விட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த திருமண்டல நிர்வாகி ஒருவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்ப, மயிரப் புடுங்கிட்டு இருந்தேன் என்று அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகித்தார் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம். இது, திருமண்டல நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, மரியாதையாக பேசுங்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் அடங்குவதாக இல்லை. மீண்டும் மீண்டும் தடித்த வார்த்தைகளால் பயன்படுத்திக் கொண்டே இருந்தார். இது தொடர்பான தற்போது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Share it if you like it