குடிநீர் வசதி கேட்ட முஸ்லீம் பெண்கள்… கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க.வினர்!

குடிநீர் வசதி கேட்ட முஸ்லீம் பெண்கள்… கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க.வினர்!

Share it if you like it

நெல்லையில் குடிநீர் வசதி கேட்ட இஸ்லாமிய பெண்களுக்கு தி.மு.க. பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சியில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் முதல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வரை முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் ஆட்சியாளர்கள் மீதும், தி.மு.க.வினர் மீதும் கடும் அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் இருந்து வந்தனர். இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், விஜயாபதி ஊராட்சியில் உள்ள ஃபேவர் பிளாக் சாலை திறப்பு விழாவுக்காக வருகை தந்தார்.

இதையறிந்த, விஜயாபதி ஊராட்சியில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள், ஜெகதீஷின் காரை மறித்து குடிநீர் வசதி கேட்டு முற்றுகையிட்டனர். அப்போது, ஜெகதீஷின் ஆதரவாளர்களான தி.மு.க. பிரமுகர்கள், இஸ்லாமிய பெண்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தி.மு.க.வினர் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த மக்கள் தி.மு.க.வின் அராஜகத்தை கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it