நெல்லையில் நர்ஸ் மனைவி உயிரோடு எரித்துக் கொலை: கணவர் அக்பர் இப்ராஹிம் வெறிச் செயல்!

நெல்லையில் நர்ஸ் மனைவி உயிரோடு எரித்துக் கொலை: கணவர் அக்பர் இப்ராஹிம் வெறிச் செயல்!

Share it if you like it

நெல்லையில் அரசு மருத்துவமனை செவிலியரை, அவரது கணவரே கத்தியால் குத்தி, நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள். இத்தம்பதிக்கு 3 மகன்கள். அய்யம்மாள், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில், பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் இஸ்லாம் மதத்துக்கு மாறி, தனது பெயரை அக்பர் இப்ராஹிம் என்று மாற்றிக் கொண்டார். அதேபோல, தனது 3 மகன்களின் பெயரையும் முஸ்லீம் பெயராக மாற்றிக் கொண்டார்.

இதனிடையே, கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். சமீபத்தில் மீண்டும் இணைந்த தம்பதியர், பாளையங்கோட்டை அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்தனர். இந்த சூழலில், நேற்று காலை அய்யம்மாள் வழக்கம்போல் பணிக்குச் சென்று விட்டு, இரவு 7 மணியளவில் பணிமுடிந்து வீடு திரும்பி இருக்கிறார். அப்போது அங்கு வந்த அக்பர் இப்ராஹிம், அய்யம்மாளை டூவீலரில் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அண்ணாநகர் முதல் தெருவில் சென்றபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்பர் இப்ராஹிம், டூவீலரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, தான் வைத்திருந்த கத்தியால் அய்யம்மாளை சரமாரியாகக் குத்தி இருக்கிறார். பின்னர், தான் தயாராக பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை, அய்யம்மாள் மீது ஊற்றி தீவைத்திருக்கிறார். இதில் அலறி துடித்த அய்யம்மாள், சிறிது நேரத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து, அக்பர் இப்ராஹிம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், உயிரிழந்த அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அக்பர் இப்ராஹிம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்து விட்டார். இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it