மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் குதுபுதீன் நிஜாம், மனைவி முகைதீன் பாத்திமா கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் குதுபுதீன் நிஜாம், மனைவி முகைதீன் பாத்திமா கைது!

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளித் தாளாளர் குதுபுதீன் நஜீம், அவரது மனைவி முகைதீன் பாத்திமா, தலைமை ஆசிரியை காதர் அம்மாள் பீவி ஆகியோரை போலீஸார் கைது செய்து போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இருந்து மேலநத்தம் செல்லும் சாலையில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக இருப்பவர் அசரத் பிலால் தெருவைச் சேர்ந்த குதுபுதீன் நிஜாம். இவரது மனைவி முகைதீன் பாத்திமா. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக தச்சநல்லூர் கோகுல் நகரைச் சேர்ந்த காதர் அம்மாள் பீவி பணிபுரிந்து வந்தார். இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சூழலில், பள்ளியின் தாளாளரான குதுபுதீன் நிஜாம், பிளஸ் படிக்கும் மாணவிகள் உட்பட பலரையும், தனது அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் பரிட்சையில் ஃபெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவிகள் 3 பேரை தனக்கு அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவிகள், சகமாணவிகளிடம் கூறி அழுதிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், பள்ளித் தாளாளரை கண்டித்து நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பெற்றோர்கள் மற்றும் சில தனியார் அமைப்பினரும் தாளாளர் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த நெல்லை மாநகர போலீஸ் கிழக்கு துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், கல்வி அலுவலர் திருப்பதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், புகார் குறித்து விசாரித்து தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. அதேசமயம், பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் பாளை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பள்ளி தாளாளர் குதுபுதீன் நஜீம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது இதையடுத்து, தாளாளர் குதுபுதீன் நஜீம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி முகைதீன் பாத்திமா, பள்ளி தலைமை ஆசிரியை காதர் அம்மாள் பீவி ஆகியோரைல போலீஸார் கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it