உண்மையை சொன்ன கவுன்சிலர்… உதை விட்ட தி.மு.க. சேர்மன்: வீடியோ வைரல்!

உண்மையை சொன்ன கவுன்சிலர்… உதை விட்ட தி.மு.க. சேர்மன்: வீடியோ வைரல்!

Share it if you like it

லஞ்சம் வாங்கச் சொன்னதாக உண்மையைச் சொன்னதால், தி.மு.க. நகர்மன்றத் தலைவர், அதே கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியின் 7-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சத்தியசீலன். இவர், வீடு கட்டுவதற்கு தடை இல்லா சான்றிதழ் கேட்டு வந்த ஒருவரிடம், 50,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வீடியோ கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கூடலூர் நகராட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் சத்தியசீலன், நகராட்சித் தலைவர் பரிமளாதான் லஞ்சம் வாங்கச் சொன்னதாகவும், தனது கமிஷன் 5,000 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தலைவர் பரிமளாவிடம் கொடுத்து விட்டதாகவும் கூறினார்.

மேலும், இந்த வீடியோ கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. நகராட்சித் தலைவர் பரிமளா ஒரு கான்ட்ராக்டரிடம் 7.5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். இதையறிந்த நான், இதுகுறித்து நகராட்சி கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினேன். இதனால், ஆத்திரமடைந்த தலைவர் பரிமளா, என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, அந்த வீடியோவை தற்போது வெளியிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், கவுன்சிலர் சத்தியசீலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பரிமளா உள்ளிட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்த கூத்தெல்லாம் அரங்கேறியது.

இந்த நிலையில்தான், தலைவர் பரிமளா, கவுன்சிலர் சத்தியசீலனை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சம்பவத்தன்று நகராட்சி கூட்டத்தில் தலைவர்தான் லஞ்சம் வாங்கச் சொன்னதாக கூறிவிட்டு வெளியே வந்த கவுன்சிலர் சத்தியசீலனை, சேர்மன் பரிமளா தாக்கி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு, தி.மு.க.வின் லஞ்ச வேட்டையை விமர்சிக்கும் பொதுமக்கள், கமிஷனுக்காக சொந்தக் கட்சிக்காரர்களே அடித்துக்கொள்வதைப் பார்த்து கிண்டல் செய்கின்றனர். இதோ அந்த வீடியோ…


Share it if you like it