விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிர்மலா சீதாராமன் !

விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிர்மலா சீதாராமன் !

Share it if you like it

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடலுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாருமான பிரேமலதா, அவரின் மகன்கள் உள்ளிட்டோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை இழந்துவிட்டதாக தெரிவித்தார். விஜயகாந்த் மறைவு செய்தியறிந்து பிரதமர் மோடி மிகவும் வருத்தமடைந்ததாகவும், அந்த துக்கத்தில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் தம்மை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார். தற்போது பிரதமர் சார்பாகவும், மத்திய அரசு சார்பிலும் அஞ்சலி செலுத்தியுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

விஜயகாந்த் இளகிய மனம் படைத்தவர். தனக்கு கிடைக்கும் வசதிகள், தன்னுடன் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தவர் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கஷ்டத்தை உணர்ந்த மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியை பார்ப்பது அரிது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். விஜயகாந்த் நம்மிடம் இல்லை. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. விஜயகாந்த் தொண்டர்களுக்கு எனது துக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

மனித நேயம் மிக சிறந்த அரசியல் தலைவரை இழந்து விட்டோம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜயகாந்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


Share it if you like it