வங்கிகளில் பணமோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் தகவல்.
முந்தைய ஆட்சியாளர்களின் துணையுடன் வங்கிகளில் கடன் உதவி பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியால் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி போன்றவர்களின் சொத்துக்களை முடக்கி அதனை விற்பனை செய்ததன் மூலம் 13 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மீட்டு உள்ளோம். கடந்த ஜூலை மாதம் மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று, ரூ. 792 கோடி மீட்டு. அத்தொகையினை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே திரும்ப வழங்கி உள்ளோம், கடந்த ஏழு ஆண்டுகளில் 5.49 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை, வங்கிகள் மீட்டு உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் லோக் சபாவில் தெரிவித்து உள்ளார்.