ஹிந்துக்களுடன் பழகக் கூடாது: முஸ்லீம் பெண்களை தாக்கிய அடிப்படைவாதிகள்!

ஹிந்துக்களுடன் பழகக் கூடாது: முஸ்லீம் பெண்களை தாக்கிய அடிப்படைவாதிகள்!

Share it if you like it

ஹிந்துக்களுடன் பழகக் கூடாது என்று சொல்லி, முஸ்லீம்கள் பெண்களை தாக்கிய சம்பவம் பல்வேறு மாநிலங்களில் அரங்கேறி வருகிறது.

தமிழகத்தில் சமீபத்தில் வேலூர் கோட்டையை சுற்றிப் பார்ப்பதற்காக ஹிந்து நண்பருடன் முஸ்லீம் பெண் ஒருவர் வந்திருந்தார். இதைக் கண்ட முஸ்லீம் இளைஞர்கள் சிலர், எப்படி ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து கொண்டு ஹிந்து ஆணுடன் வரலாம் என்று கேட்டு மிரட்டினார்கள். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மேற்கண்ட முஸ்லீம் இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஹிந்து நண்பருடன் சென்ற முஸ்லீம் பெண்ணை, அச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வழிமறித்து மிரட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, மேற்படி வீடியோக்களில், முஸ்லீம் பெண்கள், தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுடன் மட்டுமே பேச வேண்டும், பழக வேண்டும். ஹிந்து இளைஞர்களுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று ஓப்பனாக மிரட்டுகிறார்கள் முஸ்லீம் இளைஞர்கள். 3 மாநிலங்களில் நிகழ்ந்த சம்பவங்களின் காணொளி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில், முஸ்லீம் பெண்ணை, அச்சமூக இளைஞர்கள் எப்படி எல்லாம் மிரட்டுகிறார்கள் என்பது தெரிந்துகொள்ளலாம்.


Share it if you like it