கார்நாடாகவின் பேலூர், ஹாலேவித் மற்றும் சோம்நாத்புரம் ஆகிய இடங்களில் உள்ள ஒய்சாலா கோயில்கள் பாரத சிற்பக் கலையை உலகிற்கு பறைசாற்றுபவை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயில்கள் தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளன. பாரதத்தின் 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து இக்கோயில்களுக்கு கிடைத்துள்ளது. இது குறித்த தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒய்சாலா கோவில்கள் பாரதத்தின் கலாசாரப் பாரம்பரிய செறிவுக்கான தக்க சான்றாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.