நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும 18- ஆம் தேதி முதல் 22 -தேதி வரை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் ‘ஒரே நாடு ;ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் நாடு முழுவதும் (வரும் ஜனவரி மாதம்) மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பரிந்துரையின் பேரில் ஒரு நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு எடுக்கும். அப்படி எடுக்கும் பட்சத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன் கூட்டியே தேர்தல் நடைபெறும்.