ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆன்லைன் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் வாதிடப்பட்டது. திறமையை வைத்து விளையாடும் திறமையான விளையாட்டும் சூதாட்டம் தான் என அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் சட்டத்தில் வயது மற்றும் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒழுங்கு படுத்த தான் முடியும் என்று அதற்கு தடை விதிக்க முடியாது என்றும் வாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.