அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன் முகமது சபிக் அமர்வு தள்ளுபடி செய்தது.