காமெடியனுக்கு ‘பளார்’ விட்ட ஹீரோ!

காமெடியனுக்கு ‘பளார்’ விட்ட ஹீரோ!

Share it if you like it

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளரான காமெடியனை பளார் என கன்னத்தில் அறைந்த ஹீரோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

உலக அளவில் திரைப்படத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆஸ்கார். எப்படியாவது ஒருமுறையேனும் ஆஸ்கார் விருதை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் சினிமா கலைஞர்களின் ஆசையாக இருக்கும். இவ்விருது பெரும்பாலும் ஹாலிவுட் நடிகர்களுக்கே கிடைத்து வருகிறது. அந்த வகையில், 2022-ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஸ்டான்ட் அப் காமெடியனான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டைத் தலை குறித்து நகைச்சுவையாக கிண்டல் அடித்தார் கிறஸ் ராக். அதாவது, அலோபீஸியா என்று நோயால் தனது முடிகளை இழந்து வருகிறார் ஜடா ஸ்மித். ஆனால், இதையறியாத கிறிஸ் ராக், ‘ஜி ஐ ஜேன்’ என்ற படத்தின் 2-ம் பாகத்திற்காக ஜடா ஸ்மித் காத்திருப்பதாகக் கூறி கிண்டல் செய்தார். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ராணுவ வீராங்கனை மொட்டை தலையுடன் இருக்கும். ஆகவே, இதை வைத்து ஜாலியாக கமென்ட் செய்தார் கிறஸ். ஆனால், இது வில் ஸ்மித்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. உடனே எழுந்து நேராக மேடைக்குச் சென்றவர், யாரும் எதிர்பாராத விதமாக கிறஸ் ராக்கின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.

எனினும், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கிறிஸ் ராக் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால், இச்சம்பவத்துக்கு வில் ஸ்மித்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it