இந்து கடவுள் என்றால் உனக்கு கிள்ளுகீரையா?: ரஞ்சித்தை கஞ்சி காய்ச்சிய நெட்டிசன்கள்!

இந்து கடவுள் என்றால் உனக்கு கிள்ளுகீரையா?: ரஞ்சித்தை கஞ்சி காய்ச்சிய நெட்டிசன்கள்!

Share it if you like it

தனது உதவி இயக்குநர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதற்கு காவல்துறையையும், தமிழக முதல்வரையும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித். இவரிடம், உதவி இயக்குனராக பணியாற்றுபவர் பிரபல ஆபாச பேச்சாளர் விடுதலை சிகப்பி. இவர், இந்து கடவுள்களான ராமர், சீதை மற்றும் அனுமனை சமீபத்தில் இழிவுபடுத்தும் விதமாக கவிதை வாசித்து இருந்தார். இந்த காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, ஆபாச பேச்சாளர் சிகப்பியின் பேச்சை கண்டித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, பாரத் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், விடுதலை சிகப்பி மீது காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில், அவர் மீது தமிழ்நாடு காவல் துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருந்தது.

இதற்குதான், முதல்வர் ஸ்டாலினையும் தமிழக காவல்துறையையும் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். பா.ரஞ்சித்தின் இந்த திமீர் அறிக்கையை கண்டித்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it