தமிழக மக்களை கண்டித்த பா. ரஞ்சித்… பாயசம் வைத்த நெட்டிசன்கள்!

தமிழக மக்களை கண்டித்த பா. ரஞ்சித்… பாயசம் வைத்த நெட்டிசன்கள்!

Share it if you like it

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித். இவர், அட்டகத்தி, காலா, கபாலி உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கியவர். இவர், தி.மு.க. ஆட்சியில் நிகழும் அட்டூழியங்களையும், அடாவடிகளையும், தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். அந்த வகையில், தி.மு.க. அரசையும், தமிழக மக்களையும் விமர்சனம் செய்யும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவு இதோ :

தொடரும் மலக்குழி மரணங்கள். தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இக்கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள். மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம். தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு என பதிவிட்டுள்ளார்.


Share it if you like it