வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, நமது மக்கள் மற்றும் தமிழக சகோதர, சகோதரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் #என்மண்_என்மக்கள் பாதயாத்திரையை டிசம்பர் 5ஆம் தேதி வரை ஒத்திவைக்க தலைமை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி பாதயாத்திரை மீண்டும் தொடங்கும், மேலும் திருத்தப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.