தி.மு.க.வின் முகத்திரையை கிழித்த பத்ரி சேஷாத்திரி!

தி.மு.க.வின் முகத்திரையை கிழித்த பத்ரி சேஷாத்திரி!

Share it if you like it

ஜி.எஸ்.டி. நிலுவை தொகை குறித்து மத்திய அரசு மீது வீண்பழியை சுமத்தி வரும் தி.மு.க.வின் பொய் குற்றச்சாட்டை ஆதாரத்தோடு தோலுரித்து இருக்கிறார் பிரபல அரசியல் விமர்சகர் பத்ரி சேஷாத்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. கொடுத்து இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், விடியல் ஆட்சி அமைந்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனம். இதனை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தி.மு.க. அரசை கேள்வி மேல் கேள்வி எழுப்பி துளைத்து எடுத்து வருகின்றனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் அரசு. தமிழகத்தில், பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதற்கு காரணம் ஜி.எஸ்.டி. இதற்கு, மத்திய அரசே முழு பொறுப்பு என விடியல் அரசு தொடர்ந்து பொய்யான தகவலை தமிழக மக்களிடம் வழங்கி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், GST நிலுவை தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு முறையாக வழங்குகிறது என பிரபல அரசியல் விமர்சகர் பத்ரி சேஷாத்திரி மிக தெளிவாக கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.


Share it if you like it