பலுச் விடுதலை முன்னணி,  வெளியிட்ட பயங்கர காணொளி!

பலுச் விடுதலை முன்னணி, வெளியிட்ட பயங்கர காணொளி!

Share it if you like it

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பலுசிஸ்தான் விடுதலை முண்ணனி நடத்திய தாக்குதல் காணொளியை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடு பாகிஸ்தான். ஒட்டு மொத்த தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக அந்நாடு இருந்து வருகிறது. உள்நாட்டில் பசி, பஞ்சம், பட்டினி என பாகிஸ்தான் மக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும் என சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட சில மாகாணங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. அவ்வபோது, பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பலுசிஸ்தான் விடுதலை முன்னணி இயக்கத்தை சேர்ந்தவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலை படைதாக்குதலை நடத்தி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, அக்காணொளியை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

பலுசிஸ்தான், சிந்து உள்ளிட்ட மாகாணங்களை சேர்ந்த மக்கள் நாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறோம் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it