பாகிஸ்தான் ராவணுத்தினர் தங்களுக்குள்ளாகவே மோதிய கொண்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை அந்நாட்டு ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை, கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டம், தற்போது கலவரமாக மாறி பாகிஸ்தான் பற்றி எரிந்து வருகிறது. அந்தவகையில், காவல் நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என அனைத்தையும் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், கலவரத்தை கட்டுப்படுத்தாமல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இரு குழுக்களாக பிரிந்து தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டு கொண்ட சம்பவம் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.