இந்தியாவை பார்த்து வயிறு எரியும் பாகிஸ்தான் !

இந்தியாவை பார்த்து வயிறு எரியும் பாகிஸ்தான் !

Share it if you like it

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அங்குள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. முன்னதாக கடந்த ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நவாஸ் ஷெரீப், லண்டனுக்கு மருத்துவ சிகிச்சை பெற சென்றார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நவாஸ் ஷெரீப் அரசு அனுமதியுடன் லண்டன் சென்று விட்டு பின்னர் நாடு திரும்பாமல் டிமிக்கி கொடுத்தார்

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும் பாகிஸ்தானில் அரசியல் சூழல் தனக்கு சாதகமாக மாறியதாலும் கடந்த அக்டோபர் மாதம் நாடு திரும்பினார். நாடு திரும்பியது முதலே நாடு முழுவதும் பல்வேறு கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று பேசிய நவாஸ் ஷெரீப், இந்தியாவை பாராட்டி பேசினார். நவாஸ் ஷெரீப் கூறுகையில், “நமது அண்டை நாட்டினர் நிலவை தொட்டு விட்டனர். ஆனால் நாம் இன்னும் தரையில் இருந்தே எழவில்லை. நமது வீழ்ச்சிக்கு நாமே காரணம். இல்லையென்றால் இந்த நாடு வேறு இடத்தை அடைந்திருக்கும். இது இப்படியே தொடரக் கூடாது” என்றார். பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அது குறித்த தனது ஆதங்கத்தைதான் இப்படி கொட்டி தீர்த்துள்ளார் நவாஸ் ஷெரீப்.


Share it if you like it