பாகிஸ்தான் நாடா அல்லது சுடுகாடா? 18 வயது ஹிந்து சிறுமி சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் நாடா அல்லது சுடுகாடா? 18 வயது ஹிந்து சிறுமி சுட்டுக்கொலை!

Share it if you like it

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துவரும் தொடர் வன்முறையில், மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவமாக 18 வயது ஹிந்து சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடந்தேறி வருகிறது. சிறுபான்மையினரை கடத்திச் சென்று மத மாற்றுவதும், பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில், 4 வயதான ஒரு ஹிந்து சிறுமியைக் கடத்திச் சென்று கரன்ட் ஷாக் கொடுத்து மதம் மாற்றம் செய்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், 18 வயது சிறுமி கடத்தப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அமைந்திருக்கும் சுக்கூர் நகரின் ரோஹி பகுதியைச் சேர்ந்தவர் பூஜா ஓட். 18 வயதான இவரை, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நேற்று கடத்திச் சென்றிருக்கிறார்கள். மத மாற்றம் செய்வதற்கா அல்லது பாலியல் பலாத்காரம் செய்வதற்கா என்பது தெரியவில்லை. ஆனால், பூஜாவோ கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால், பட்டப்பகலில் நடுரோட்டிலேயே சிறுமியை சுட்டுக் கொலை செய்திருக்கிறார். தலையில் குண்டு பாய்ந்ததில் அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். உடனே, அச்சிறுமியின் உடலை நடுரோட்டில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டது கடத்தல் கும்பல். இதில், குறிப்பிடத்தக்க விஷம் என்னவென்றால், இச்சிறுமியை ஏற்கெனவே ஒரு முறை கடத்த முயற்சி செய்திருக்கிறது ஒரு கும்பல். அப்போது அச்சிறுமி பூஜா அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டார். ஆனால், இந்த முறை அக்கும்பல் அவரை சுட்டுக் கொன்று விட்டது.

இது குறித்து சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை அடிக்கடி எழுப்பிவரும் பா.ஜ.க. தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜமாகி விட்டது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஒவ்வொரு நாளும் இதுபோன்ற 2 சம்பவங்கள் அரங்கேறுகிறது. ஆனால், இவற்றில் ஒரு சில மட்டுமே வழக்காக பதிவாகிறது. மற்றவை புகாரளிக்கப்படுவதில்லை. இந்த சட்டமீறல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இருந்து வந்தாலும், தற்போது நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இதே சிந்து மாகாணத்தின் உமர்கோட் மாவட்டத்தில் 17 வயது ஹிந்து சிறுமி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல, நேற்று முன்தினம் ஒரு ஹிந்து சிறுமியை கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார். மேலும், 4 வயதான ஒரு பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்று நான் ஹிந்து பெண் அல்ல, இஸ்லாமிய பெண் என்று சொல்லும்வரை கரன்ட் ஷாக் கொடுத்திருக்கிறார்கள் கொடூரவாதிகள். இதையெல்லாம் பாகிஸ்தான் அரசு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it