WIN TV நிருபர் எழுப்பிய கேள்விக்கு பம்மிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்

WIN TV நிருபர் எழுப்பிய கேள்விக்கு பம்மிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்

Share it if you like it

இன்று 13-07-2021 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களிடம் “கேரளாவில் நீட் தேர்வை ஆதரிக்கும் நீங்கள் தமிழகத்தில் எதிர்ப்பது ஏன்?” என்று WIN TV நிருபர் ஜெயகிருஷ்னன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் பாலகிருஷ்ணன் “ஆலவிடூரா சாமி” என்று தெரித்து ஓடிவிட்டார்.

மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் ஏழை மானவர்கள் அனைவரும் மருத்துவ கல்வி படிப்பதற்காகவும் உச்சநீதி மன்றம் நீட் தேர்வை கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் அறிவுறுத்தியது. மத்திய அரசு பாராளுமன்றம் மூலம் அதை நிறைவேற்றியது.

இதனால் பல அரசியல் காரணத்துக்காகவும் மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் திமுக, கம்யுனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகள் நீட் தேர்வை தமிழகத்தில் எதிர்த்து வருகிறார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்ப்பதும் மற்ற மாநிலங்களிலும் அதை ஆதரித்து வருவதும் நம்மால் உணரமுடிகின்றது. இவர்கள் தமிழக மக்களை முட்டாள் என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை மீண்டும் மீண்டும் இதுபோன்ற நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அவ்வப்போது இந்த பத்திரிகை சந்திப்பில் நடந்த சம்பவம் போன்ற சம்பவங்கள் நடக்கும் பொழுது தான் இவர்கள் ஆடும் நாடகம் படி படியாக தெரியவருகிறது.

 


Share it if you like it